Monday, March 21, 2011

கருணாநிதியின் தேர்தல் அறிக்கை


கருணாநிதியின் தேர்தல் அறிக்கைக்கு என் பின்னூட்டம்





தாய்மார்களுக்கு, அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப, இலவசமாக கிரைண்டரோ அல்லது மிக்சியோ வழங்கப்படும்.

நா சா :

அப்போ கிரைண்டர் அல்லது மிக்சி நிறுவனத்தோடு டீல் முடிந்ததுன்னு சொல்லுங்க. DVD , AC நிறுவனம் எதுவும் செட் ஆகலிங்களா அய்யா ?


குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

நா சா :

அப்போ பத்து வருடம் முன்பு ஏற்கனவே பதிவு செஞ்சவன் நாக்கு வழிக்கவா ? முதலில் அவனுக்கு முன்னுரிமை கொடுங்கள். பிறகு பார்க்கலாம்.

* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடனுதவி, ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். அதில், ரூ.2 லட்சம் கடன், மானியமாக வழங்கப்படும்.

நா சா :

மகளிர் என்றால் கனி , தயா , ராசத் இவங்க இல்லையே

அரசு கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும்.

நா சா :

இதை ஜாதி வாரியாக கொடுக்காமல் பொருளாதார அடிப்படையில் கொடுக்கலாமே

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 3 இலவச சீருடைகள் வழங்கப்படும்.

நா சா :

ஜட்டி , பனியனும் சேர்த்து தந்தால் கோடி புண்ணியம்

* 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுவரை பெறப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டியை அரசே செலுத்த பரிசீலிக்கப்படும்.

நா சா :

ஏற்கனவே ஒரு லட்சம் கோடி கடன் இருக்கு. இந்த லட்சணத்தில இதை எப்படி எடுத்துக் கொள்வது ? ஜோக் ஆகவா ?


முதியோர், ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.

நா சா :

அதுல எதுவும் இந்த இடைத் தரகர்கள் பிடுங்கி விட மாட்டங்களே ?


சென்னை-கோவை இடையே புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, கோவையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்து, மாமல்லபுரம்வரை நீட்டிக்கப்படும்.

நா சா :

அய்யா . கனவு கண்டது போதும். எழுந்திரிங்க. சென்னை மெட்ரோ திட்டத்திற்கே 15000 கோடி மேல் செலவு ஆகும். அதுக்கே ஜப்பான் கிட்ட கடன் வாங்கி செய்றோம். இதுல மதுரை, கோவை எல்லாம் 2050 இல் தான் மெட்ரோ திட்டம் அமல் படுத்தப்படும். சும்மா லுல்லுல்லாய் பண்ணாதீங்க


* போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்.

நா சா :

அந்த துணை நகரம் உங்க வாரிசுகள் வாங்கி குவித்து இருக்கும் இடங்களில் தானே அமையும்.


சென்னை அருகே குறைந்த வாடகை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படும்.

நா சா :

அதை நாங்கள் சில்மா , தய , ஸ்டால் , அழகு போன்ற ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்போம்.

நடமாட முடியாத முதியோருக்கு மாதத்தில் ஒருநாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிப்பார்கள்.

நா சா :

- அவங்கள government hospital க்கு ஒழுங்கா வரச் சொல்லுங்க போதும். வேலை நேரத்திற்கு இருந்து பணி செஞ்சாலே பெரிய விஷயம்.


சென்னை, தாம்பரம் போல, மதுரையிலும் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த அரசு சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.

நா சா :-

சும்மா கலாயிகாதீங்க. தனியார் மருத்துவமனை கட்டணம் ஒழுங்கு என்பதெல்லாம் சும்மா விஜயகாந்த் வீர வசனம் என்று எங்களுக்கு தெரியும்.


அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.

நா சா :-

அதனை எங்கள் MLA மற்றும் மந்திரிகளே அனுமதி பெற்று நடத்துவார்கள் .


ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ இலங்கை அரசை வற்புறுத்துவோம்.

நா சா :

ஏற்கனவே ஒரு லட்சம் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். இன்னும் பல லட்சம் கடிதங்கள் எழுதி உலக சாதனை புரிவேன்.

திருச்சி, மதுரையில் மனநல மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

நா சா :-

உங்க ஆட்சி தொடர்ந்தால் கட்டாயம் இது தேவைதான்.


* கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டுவர வலியுறுத்தப்படும். தரமான இலவச கல்வி அளிக்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.

நா சா :

சும்மா புரு புரா .


தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்உற்பத்தி திட்டங்கள் அதிகரிக்கப்படும்.

நா சா :-

இருக்கிற மின் நிலையங்கள் ஒழுங்காக இழப்பில்லாமல் மின் உற்பத்தி செய்தாலே போதுமானது

* விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றுவது தடுக்கப்படும்.

நா சா : -

அதிமுக வினருக்கு மட்டும்.


No comments:

Post a Comment