Monday, March 21, 2011

எனது நிலைப்பாடும்
கொள்கையும்
எனது விருப்பத்திற்கேற்ப அமைத்து விடுகிறேன்.

சாலையில் குடல் சிதறிய
நாயையோ பூனையையோ
பார்க்கும் போது வரும் பரிதாபம்
கையில் கிடக்கும்
வறுத்த கோழியிடம் ஏற்படுவதில்லை.

எனது நிலைப்பாடும்
கொள்கையும்
எனது விருப்பத்திற்கேற்ப அமைத்து விடுகிறேன்.

----------------------------------------------------------------------------------

" எப்படி முன் பார்த்தது போலவே மாறாமல் இருக்கிறாய் " ?
என்று கேட்டான் நண்பன்.
" மாற்றங்களால் " என்றேன் நான்.

----------------------------------------------------------------------------------

மேகம்
-------------

நீரில் தொடங்கியது
என் வாழ்க்கைப் பயணம்.
றுற்கார்திஎ என்னைத் தமாடுற வைத்தது.
தென்றல்
புயல்
வெப்பம்
குளிர்
அனைத்து நிலைகளிலும்
முட்டிமோதி
மூழ்கி திளைத்து
மலையோடு பின்னிப் பிணைந்து
மரங்கள் ஊடே நெளிந்து வளைந்து
க ளை த் து
கலந்தேன்
மண்ணை.
ஒன்றையும் கொண்டு செல்லாமல் .
ஒன்றையும் விட்டு செல்லாமல்.

----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment